ஒவ்வொரு மந்திரமும் சிவானுபவம் பெறும் இரகசிய சாதனை முறையுடன்
பல ஆன்மிக நூல்களை நாம் வாசிக்கிறோம்.
பல உரைகளைக் கேட்கிறோம்.
பல உயர்ந்த கருத்துகளையும் அறிந்துகொள்கிறோம்.
ஆனால் அவற்றில் எவ்வளவு நமது சிந்தனை, சொல், செயல் மற்றும் வாழ்க்கையாக மாறுகிறது?
திருமூலரின் மூவாயிரம் மந்திரங்கள் வெறுமனே வாசித்து அறிந்துகொள்வதற்காக எழுதப்பட்டவை அல்ல. அவை பொருளறிந்து கற்கப்பட்டு, பாவனையுடன் எழுதப்பட்டு, மௌனத்தில் உணரப்பட்டு, வாழ்வில் சாதனையாகப் பதிக்கப்பட வேண்டியவை.
இந்த ஞானப் பயணத்திற்கான ஒரு புதிய ஒலிவாசலாக—
திருமந்திரத்தை கருத்தறிந்து,
அதன் யோக இரகசியங்களை உணர்ந்து,
அதன் ஆகம நெறியைப் புரிந்து,
அதன் தந்திர நுணுக்கங்களை வாழ்வில் சாதனையாக மாற்றும்
சாதகர்களை உருவாக்குவதே எமது நோக்கம்.
இது ஒரு சாதாரண வலைத்தளம் அல்ல.
இது திருமூலர் அருளிய ஞானத்தை, நவீன மனிதனின் மனம், அறிவு, அனுபவம் ஆகியவற்றோடு இணைக்கும் ஒரு மெய்நிகர் குருகுலம்.
ஒராயிரம் (1000) சாதகர்களை திருமூல குருபரம்பரையின் அடிப்படையில் திருமந்திரத்தை முழுமையாகக் கருத்தறிந்து கற்று, அதன் படி சாதனை செய்து, தமது வாழ்க்கையை மாற்றிய உயர் ஆன்மாக்களாக உருவாக்குவது.
எமது குருகுலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் கிடையாது.
ஏனெனில் வித்யை விற்பனை செய்யப்படுவதில்லை.
இந்த மரபில், குரு அறிவை வழங்குகிறார்; மாணவன் தனது திறனுக்கும் மனவிருப்பத்திற்கும் ஏற்ப குருகுல தர்மத்தில் பங்குகொள்கிறான்.
குருகுலத்தின் பணிகள் தொடர, அதன் தேவைகள் நிறைவேற, மனமுவந்து பங்களிக்க விரும்புவோர் தங்களால் இயன்றதைச் செய்யலாம்.
இறுதியாக ஒரு கேள்வி:
இந்த உயிர்ப்பிக்கும் பணிக்காகத்தான் திருமந்திர அரண்மனை உருவாகியுள்ளது.
திருமூலரின் திருமந்திரம் புத்தகங்களில் மட்டுமல்ல,
மனிதர்களின் வாழ்விலும் எழுதப்பட வேண்டும்.
அந்தப் பயணத்தில் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
குடும்ப வழி அகத்திய மகரிஷியை குருவாகக் கொண்ட யோக சாதகர்; காயத்ரி, ஸ்ரீ வித்யா உபாசகர்; சித்தர் பாடல்களின் யோக ஞான விளக்க உரையாசிரியர்.
திருமூலரின் ஞானத்தை உங்கள் தனிப்பட்ட ஆன்மீக பயணத்தில் கொண்டு செல்லுங்கள்
முதல் மந்திரம் →