அன்பர்களே,
நீங்கள் திருமந்திரத்தின் ஒரு மந்திரத்திற்கான பொருளையும், அதன் யோக–ஆகம–தந்திர விளக்கத்தையும் வாசித்துள்ளீர்கள்.
ஆனால், உங்களிடம் ஒரு கேள்வி…
திருமந்திரத்தைப் பற்றி அறிந்தீர்களா?
அல்லது
திருமந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
இவை இரண்டும் ஒன்றல்ல.
திருமூலர் அருளிய ஒவ்வொரு திருமந்திரமும், வெறும் பாடல் அல்ல; ஒரு வருட தவத்தின் அனுபவச் சுருக்கம். அந்த அனுபவத்தை வெறும் வாசிப்பால் மட்டுமே முழுமையாகப் பெற முடியாது. அறிவு வழியைக் காட்டும்; ஆனால் சாதனையே அந்த வழியில் நம்மை நடத்தும்.
அதனால்தான், எமது குருநாதர் அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள், திருமந்திரத்தை வெறும் நூலாக அல்ல, வாழ்வாக மாற்றும் ஒரு தனித்துவமான சாதனை முறையாக திருமந்திர எழுத்துச் சாதனையை வகுத்துத் தந்துள்ளார்.
இந்த எழுத்துச் சாதனை என்பது,
ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகத்திற்கு சொற்களை நகலெடுக்கும் செயல் அல்ல.
இது,
நாள்தோறும் ஒரே ஒரு மந்திரத்தை மட்டுமே எழுதும் இந்த ஒழுக்கம், மனத்தின் அவசரத்தைக் குறைத்து, பொறுமையையும், கவனத்தையும், உள்ளுணர்வையும் வளர்க்கிறது. காலப்போக்கில், திருமந்திரம் ஒரு நூலாக உங்கள் கையில் இருப்பதில்லை; அது உங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வெளிப்படத் தொடங்கும்.
திருமந்திரத்தைப் படித்தவர்கள் பலர் இருக்கலாம்.
திருமந்திரத்தை வாழ்ந்தவர்கள் சிலரே.
அந்த அரிய சாதகர்களின் வரிசையில் நீங்கள் இணைவதற்கான அழைப்பே திருமந்திர எழுத்துச் சாதனை.
நீங்களும் இந்த அருள் யாத்திரையில் இணைந்து,
ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரம்,
ஒவ்வொரு மந்திரத்திலும் ஒரு புதிய விழிப்பு,
ஒவ்வொரு விழிப்பிலும் சிவத்தை நோக்கிய ஒரு புதிய படி எடுத்து வையுங்கள்.
வாருங்கள்!
திருமந்திரத்தை வெறும் வாசிப்பதிலிருந்து, அதை வாழும் ஆன்மிகப் பயணத்திற்கு ஒன்றாக முன்னேறுவோம்.
திருமந்திர அரண்மனை – உலகளாவிய திருமந்திர குருகுலம்
திருமந்திர எழுத்துச் சாதனையில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள், கீழ்வரும் விண்ணப்படிவத்தை நிரப்பி திருமந்திர அரண்மனை திருமூலர் குருகுலத்தில் இணையுங்கள்.
📝 விண்ணப்படிவம் →
சிவசிவ. நற்றுணையாவது நமச்சிவாயவே!
திருமந்திரப் படிகட்டு: 04
அந்தர்யாமியை உணரும் அகநெறி
சிவஞானச் செல்வர்களே! திருமூல தேவர் தன் தவ வலிமையால் சமைத்த மூவாயிரம் ஞானப் படிக்கட்டுகளில், நாம் இன்று நான்காவது படியில் கால் வைக்கிறோம். இது புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டிற்கு (Internalization) நம்மை அழைத்துச் செல்லும் முக்கியமான திருப்புமுனை.
ணக்கனென் றேத்திடு நாதனை நாடொறும்
பக்கநின் றாரறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே.
சந்தி பிரித்தால்:
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே
ஒக்க நின்றானை: பிரபஞ்சத்தின் அணுக்கள்தோறும் நீக்கமற, சமமாக, கலந்து நிற்பவனை. (விஸ்வமயமாக விளங்குபவன்).
உலப்பிலி தேவர்கள் நக்கன் என்று ஏத்திடு நாதனை: அழிவற்ற தேவர்கள் இறைவனை "நக்கன்" என்று போற்றுகின்றனர். 'நக்கன்' என்பது திகம்பரன் – அதாவது திசைகளையே ஆடையாகக் கொண்டவன். பற்றுக்களற்ற, உருவமற்ற பரவெளி என்பது பொருள்.
நாள்தொறும் பக்கம் நின்றார் அறியாத பரமனை: இது மிக நுட்பமான இடம். இறைவனுக்கு மிக அருகில் நின்று புறக்கிரியைகளைச் செய்பவர்கள்கூட, அவனது உண்மையான சொரூபத்தை உணர்வதில்லை. ஏனெனில் அவன் வெளியிலில்லை, உள்ளே இருக்கிறான்.
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே: "புக்கு" என்றால் புகுதல் (Entry). என் அக வெளியினுள் நான் புகுந்து, அங்கு நிலைபெற்று (நின்று), அவனைத் தியானிப்பேன் (உன்னி). இதுவே மெய்யான சிவத்தை அறியும் வழி.
இந்த மந்திரத்தில் வரும் "புக்கு நின்று உன்னி" என்ற தொடர், கிரியா மார்க்கத்திலிருந்து ஞான மார்க்கத்திற்கு மாறும் வித்தையை சொல்கிறது. சிவாகமங்கள் பூசையை இருவகைப்படுத்தும்:
காமிக ஆகமம் இதனை "ஆத்மலிங்க பூசை" என்று குறிப்பிடும். அதாவது, தன்னைச் சிவமாக பாவித்துப் பூசித்தல் (சிவோகம் பாவனை). வெளியே தேடுபவர்களுக்குச் சிவம் எட்டாக்கனி; உள்ளே புகுந்து தேடுபவர்களுக்கு அவன் எளியவன்.
இறைவன் நமக்குப் பக்கத்தில் இருப்பவன் அல்ல, நமக்குள் இருப்பவன். நாம் வெளி உலகை நோக்கிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நமக்குள் "புக்கு" (நுழைந்து) பார்த்தால், அங்கே "நக்கனாய்" (நிர்வாணப் பரம்பொருளாய்) ஆதிநாதன் வெளிப்படுவான்.
திருமூலர் 03 வது மந்திரத்தில் தெளிவாக சிவத்தை உணரும் நெறி அகத்தில் பயணிக்கும் தியான நெறி என்பதை தெளிவாகச் சொல்லி எம்மை அகப்பயணத்தை ஆரம்பிக்கச் சொல்கிறார்!
அன்பர்களே, உங்களில் எத்தனை பேர் புறக்கிரியையில் மாத்திரம் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சிறிது நேரமாவது புக்கு நின்று உன்னி அகத்தில் பயணிக்கிறீர்களா? புறக்கிரியையில் மாத்திரம் நின்றால் சிவானுபவம் பெற முடியாது என்பது விளங்குகிறதா? இந்தப் பாடலில் நமக்குத் தெளிவான ஒரு உபதேசத்தைத் தந்திருக்கிறார் நாம் எல்லோரும் சிவானுபவம் பெற வேண்டும் என்றால் புறக்கிரியை மாத்திரம் போதாது, உள்ளே சென்று அகத்தில் அறியும் மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று!
உரையாடுங்கள்! இன்னும் 2996 படிகள் ஏறவேண்டும், களைப்புத் தெரியாமல் இருக்க, சோர்வுறாமல் இருக்க உரையாடுவது உற்சாகம் தரும்! கண்களை மூடி அமர்ந்து திருமூலர் சமைத்த பரசிவத்தை நோக்கிய அந்தப் படிக்கட்டுகளில் 04 வது படிக்கட்டில் நிற்பதாக மகிழ்ச்சியுறுங்கள்! ஏனென்றால் சிவன் நந்தியில் அமர்ந்தார் என்பதன் சூட்சும விளக்கம் ஆனந்தமான மனதில் உணர்வில் அமர்பவர் என்பதே! எம்முள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெருகுவது சிவன் எம் உணர்வில் அமர்வதன் அறிகுறி! பரசிவத்தின் பேரொளி நம் அனைவருக்குள்ளும் பிரகாசிக்கட்டும்! அடுத்த பதிவில் திருமூலரின் அகப்பயணத்தைப் பற்றியவொரு சுவாரசியமான விஷயத்தைக் கூறுகிறேன். திருச்சிற்றம்பலம்.