அன்பர்களே,
நீங்கள் திருமந்திரத்தின் ஒரு மந்திரத்திற்கான பொருளையும், அதன் யோக–ஆகம–தந்திர விளக்கத்தையும் வாசித்துள்ளீர்கள்.
ஆனால், உங்களிடம் ஒரு கேள்வி…
திருமந்திரத்தைப் பற்றி அறிந்தீர்களா?
அல்லது
திருமந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டீர்களா?
இவை இரண்டும் ஒன்றல்ல.
திருமூலர் அருளிய ஒவ்வொரு திருமந்திரமும், வெறும் பாடல் அல்ல; ஒரு வருட தவத்தின் அனுபவச் சுருக்கம். அந்த அனுபவத்தை வெறும் வாசிப்பால் மட்டுமே முழுமையாகப் பெற முடியாது. அறிவு வழியைக் காட்டும்; ஆனால் சாதனையே அந்த வழியில் நம்மை நடத்தும்.
அதனால்தான், எமது குருநாதர் அகஸ்திய குலபதி ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள், திருமந்திரத்தை வெறும் நூலாக அல்ல, வாழ்வாக மாற்றும் ஒரு தனித்துவமான சாதனை முறையாக திருமந்திர எழுத்துச் சாதனையை வகுத்துத் தந்துள்ளார்.
இந்த எழுத்துச் சாதனை என்பது,
ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகத்திற்கு சொற்களை நகலெடுக்கும் செயல் அல்ல.
இது,
நாள்தோறும் ஒரே ஒரு மந்திரத்தை மட்டுமே எழுதும் இந்த ஒழுக்கம், மனத்தின் அவசரத்தைக் குறைத்து, பொறுமையையும், கவனத்தையும், உள்ளுணர்வையும் வளர்க்கிறது. காலப்போக்கில், திருமந்திரம் ஒரு நூலாக உங்கள் கையில் இருப்பதில்லை; அது உங்கள் சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வெளிப்படத் தொடங்கும்.
திருமந்திரத்தைப் படித்தவர்கள் பலர் இருக்கலாம்.
திருமந்திரத்தை வாழ்ந்தவர்கள் சிலரே.
அந்த அரிய சாதகர்களின் வரிசையில் நீங்கள் இணைவதற்கான அழைப்பே திருமந்திர எழுத்துச் சாதனை.
நீங்களும் இந்த அருள் யாத்திரையில் இணைந்து,
ஒவ்வொரு நாளும் ஒரு மந்திரம்,
ஒவ்வொரு மந்திரத்திலும் ஒரு புதிய விழிப்பு,
ஒவ்வொரு விழிப்பிலும் சிவத்தை நோக்கிய ஒரு புதிய படி எடுத்து வையுங்கள்.
வாருங்கள்!
திருமந்திரத்தை வெறும் வாசிப்பதிலிருந்து, அதை வாழும் ஆன்மிகப் பயணத்திற்கு ஒன்றாக முன்னேறுவோம்.
திருமந்திர அரண்மனை – உலகளாவிய திருமந்திர குருகுலம்
திருமந்திர எழுத்துச் சாதனையில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள், கீழ்வரும் விண்ணப்படிவத்தை நிரப்பி திருமந்திர அரண்மனை திருமூலர் குருகுலத்தில் இணையுங்கள்.
📝 விண்ணப்படிவம் →
இனி திருமூலரின் மூன்றாவது மந்திரம்
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
இதை சந்தி பிரித்தால்
இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கு உம் நல்ல மாதுக்கும் நாதனை
மேல் திசைக்கு உள் தென் திசைக்கு ஒரு வேந்தன் ஆம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே
இந்த இரண்டாது மந்திரம்வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு சாதாரண சிவஸ்துதி போலத் தோன்றலாம்; ஆனால் அதன் சொற்கள் ஒவ்வொன்றும் தந்திர ஆகம மரபில் மறைந்திருக்கும் ஆழ்ந்த யோக ரகசியங்களையும், மனிதனின் உள் சக்தி எழுச்சியையும், பிரபஞ்ச உருவாக்கத்தின் மர்மப் பாதையையும் சுட்டிக் காட்டுகின்றன. “திசை”, “மாது”, “கூற்று” போன்ற எளிய சொற்களின் பின்னால் மறைந்திருப்பது மந்திரம், பிராணன், சக்தி, மரணத்தை வெல்லும் அறிவு போன்ற உயர்ந்த தத்துவங்களே என்பதை உணரும்போது, இந்தப் பாடல் ஒரு பாடலாக இல்லாமல், சாதகரை உள்ளார்ந்த உணர்வின் உச்சிக்குக் கொண்டு செல்லும் ஒரு மந்திரக் கதவாக வெளிப்படுகிறது.
இனி ஒவ்வொரு வரியாக அர்த்தத்தைப் பார்ப்போம்;
“போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
இந்த வரி உண்மையில் ஒரு சாதனை சூத்திரம்:
என்ற ஒழுங்கை விளக்குகிறது. இதன் மூல அர்த்தம் : “புகழ்ந்து பாடப்படும், இனிய உயிர்களில் நிலைபெற்றிருக்கும் பரிசுத்தமானவன்”
திருமந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடு: 👉 பதி – பசு – பாசம்
இதில்:
📌 ஆக: “சிவன் உயிர்களில் உள்ளே இருப்பவன்”
சைவ ஆகமங்கள் கூறும் உண்மை சிவன் சீவனின் உள்ளே உறைபவன் - அந்தர்யாமி! 👉 அதாவது: சிவன் கோயிலில் மட்டும் அல்ல உயிரின் உள்ளே சித்தத்தில் உறைகிறான். 📌 ஆக: “உயிர் மன்னும் புனிதன்” = அந்தர்யாமியான சிவன்
இப்போது முக்கியமான பகுதி: 👉 “இசைத்து” என்றால் சாதாரணமாக பாடுதல்
ஆனால்: திருமந்திரத்தில் “இசைத்தல்” என்றால்: மந்திரம், நாதம். 📌 ஏன்? ஏனெனில்: முழு நூலும் யோக–மந்திர–தந்திர நூல் சாதாரண பக்தி நூல் மட்டும் அல்ல 👉 ஆக: “இசைத்து” என்பது → மந்திர உச்சாரணம்
தந்திரத்தின் அடிப்படை சூத்திரம்: மந்திரம் + பிராணன் = சித்தி
இப்போது வரியை மீண்டும் பாருங்கள்: போற்றி இசைத்து → மந்திர ஒலி, உயிர் → பிராண சக்தி, மன்னும் → நிலைபெறுதல். 📌 ஆக தர்க்க ரீதியாக: மந்திர ஒலியாக, நாதமாக சிவன் உயிரில் நிலைபெற்றுள்ளார் என்ற இரகசியம் விளக்கப்பட்டுள்ளது.
அடுத்த வரிகள் சதாசிவ மூர்த்தத்தின் பஞ்ச வக்த்ரங்களைச் சொல்வதிலிருந்தும், அங்கிருதே மந்திரங்கள் அனைத்தும் கிளைத்தது என்பதை ஆகமங்கள் உறுதிப்படுத்துவதைக் கொண்டும் இதை மேலும் உறுதி செய்துகொள்ளலாம்!
அடுத்த வரி
நால் திசைக்கு உம் நல்ல மாதுக்கும் நாதனை மேல் திசைக்கு
இந்த வரி முழுவது மந்திரங்கள் வெளிப்பட்ட நிலைகளைச் சொல்லும்
நால் திசை என்பது கிழக்கு (தற்புருடம்), மேற்கு (சத்யோஜாதம்), வடக்கு (வாமதேவம்), தெற்கு (அகோரம்) இவற்றையும் மேல் திசை என்பது ஊர்த்துவ முகமான ஈசான முகத்தையும் குறிக்கும்! இங்கிருந்து வெளிப்பட்ட அனைத்து மந்திரங்களும் சக்தி வடிவானவை. அனைத்து மந்திரங்களும் சிவனில் இருந்து வெளிப்பட்ட சக்தியான மாது, அதற்கு நாதன் சிவனே! எல்லா மந்திரங்களுக்கும் நாதன் சிவனே! ஆனால் மந்திரங்கள் அனைத்து சக்தி ரூபமானவை!
அடுத்த வரி இன்னும் இரகசியமான ஒன்று
தென் திசைக்கு ஒரு வேந்தன் ஆம் கூற்று
தென் திசைக்கு ஒரு வேந்தனாக இருப்பவன் யமன் அவனை உதைத்தானை யான் கூறுகிறேன் என் கிறார் திருமூலர். அதாவது தென் திசை அரசனாக யமனை உதைத்த அந்த மரணமில்லாத பெருவாழ்வு தரக்கூடியவனைப் பற்றி நான் இந்த திருமந்திரத்தில் கூறுகிறேன் என்று சொல்கிறார். எப்பேர்பட்ட இரகசியத்தை இங்கே உரைக்கிறார்;
ஆக இந்தப் பாடலில் திருமூலர் சொல்கிறார்; நான் இந்த திருமந்திரத்தில் உயிரின் உள்ளே அந்தர்யாமியாக நாதமாக சீவனில் உறையும் சிவனை உணரும் வழியை ஐந்து முகங்களிலிருந்தும் வெளிப்பட்ட மாதுவான மந்திர சக்தியின் ஆற்றலால், யமனை உதைத்து மரணத்தை வென்றி சீவன் சிவனாகும் இரகசியத்தை இங்கே யான் உரைக்கப்போகிறேன் என்பதாம்!
இதனாலேயே இங்கேயுள்ள பாடல்கள் எல்லாம் மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
இந்த விளக்கம் உங்களில் புதியதொரு உற்சாகத்தை உருவாக்கியதா? சீவனைச் சிவமாக்க மந்திர சாதனை எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதா இருக்கிறதா? இந்தப் பதிவை வாசித்த போது ஏற்பட்ட உங்கள் உணர்வுகளைக் கீழே பதியுங்கள்!